இலங்கையில் 1988ம் ஆண்டு டிசம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில்
பிரேமதாசா வெற்றி பெற்றார். பிரேமதாசாவுக்கு 25,69,199 ஓட்டுகளும், அவரை
எதிர்த்து போட்டியிட்ட திருமதி பண்டாரநாயகாவுக்கு 22,99,770 ஓட்டுகளும்
கிடைத்தன. தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரேமதாசா 1989ம் ஆண்டு
ஜனவரி 2ந்தேதி அதிபராக பதவி ஏற்றார்.
பிரேம தாசா
புத்த மதத்தைச் சேர்ந்த மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர். மே தினத்தை
முன்னிட்டு, இலங்கை ஆளும் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி, கொழும்பு நகரில்
1.5.1993 அன்று ஒரு ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த
ஊர்வலத்துக்கு பிரேமதாசா தலைமை தாங்கி ஒரு "ஜீப்"பில் சென்றார். நகரின்
மையப்பகுதியான ஆர்மர் தெருவில் பகல் 12.45 மணி அளவில் ஊர்வலம் போய்க்கொண்டு
இருந்தது.
அப்போது உடலில் வெடிகுண்டை
கட்டிக்கொண்டு சைக்கிளில் வந்த ஒரு மர்ம மனிதன் பிரேமதாசாவின் "ஜீப்" மீது
மோதுவதற்காக நெருங்கினான். பாதுகாப்பு படையினர் அவனை தடுத்து
நிறுத்தியபோது, அவன் தன் உடலில் கட்டியிருந்த சக்தி வாய்ந்த குண்டை
வெடிக்கச் செய்தான். குண்டு வெடிப்பில் சிக்கி பிரேம தாசா உடல்
சின்னாபின்னமாகி மரணம் அடைந்தார்.
குண்டை வெடிக்கச்
செய்த மர்ம மனிதனும், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் சிதைந்து
செத்தான். குண்டு வெடிப்பில் பிரேமதாசாவின் பாதுகாவலர்கள் 6 பேர் உள்பட 40
பேர் பலியானார்கள். இவர்களில் 16 பேர் உடல்கள் அடையாளம் காணமுடியாத
அளவிற்கு சிதறிப்போய்விட்டன. 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள்.
குண்டு வெடித்த ஆர்மர் தெரு ஒரே ரத்தக் களறியாக காட்சி அளித்தது.
எங்கு
பார்த்தாலும் பீறிட்டு அடித்த ரத்தமும், மனித தசைகளுமாக காணப்பட்டன.
பிரேமதாசாவுக்கு பின்னால் கார்களில் வந்து கொண்டிருந்த மந்திரிகள் உயிர்
தப்பினார்கள். குண்டு வெடிப்பில் பிரேமதாசா காயத்துடன் தப்பி விட்டதாக
முதலில் வந்த தகவல்கள் தெரிவித்தன. ஆனால் அவர் என்ன ஆனார் என்று அரை மணி
நேரம் குழப்பம் நிலவியது.
பிறகு அவரது உடல் சின்னா
பின்னமாக சிதறிப் போய்விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. குண்டு
வெடித்த மர்ம மனிதன் மோட்டார் சைக்கிளில் வந்தான் என்றும், நடந்து போய்
பிரேமதாசாவை நெருங்கினான் என்றும் மாறுபட்ட தகவல்கள் தெரிவித்தன. இலங்கை
முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு, கொழும்பு நகரில் ராணுவத்தினர்
நிறுத்தப்பட்டனர்.
அதன் பிறகே டெலிவிஷன் மூலம்
பிரேமதாசா படுகொலை செய்தி அறிவிக்கப்பட்டது. இலங்கை பிரதமராக இருந்த
விஜயதுங்கே தற்காலிக அதிபராக (ஜனாதிபதி) நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர்
பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பிரேமதாசா படுகொலை குறித்து ஜனாதிபதி சங்கர்
தயாள் சர்மா, துணை ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், பிரதமர் நரசிம்மராவ்,
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆகியோர் அதிர்ச்சியும், துயரமும்
அடைந்தார்கள்.
இலங்கை தற்காலிக ஜனாதிபதிக்கு ஒரு
அனுதாப செய்தி அனுப்பினார். பிறகு 6ந்தேதி பிரேமதாசா இறுதிச்சடங்கு
நடந்தது. பிரேமதாசா கொலை செய்யப்பட்ட இடத்திலேயே கொலைகாரனின் துண்டித்த
தலை கைப்பற்றப்பட்டது. அந்த தலை எந்தவித சேதமும் இல்லாமல் இருந்தது. கண்கள்
மூடிய நிலையிலும், வாய் திறந்த நிலையிலும் இருந்தது. தூங்கும் ஒரு மனிதன்
போல அந்த தலை காணப்பட்டது.
துப்பறியும் போலீசார்
அந்த தலை படத்தை பத்திரிகைகளில் வெளியிட்டனர். இலங்கை ரூபவாகினி
டெலிவிஷனிலும் அந்த தலை காண்பிக்கப்பட்டது. போலீசாரின் இந்த நடவடிக்கை
மூலம் கொலையாளி யார் என்ற அடையாளம் தெரிந்து விட்டது. ராஜீவ் காந்தி,
சோனியா காந்தி ஆகியோருடன் பிரேமதாசாவும், அவர் மனைவி ஹேமாவும்.
பிரேமதாசாவின் வீடு, கொழும்பு நகரில் `சுசரிதா' என்ற பகுதியில் இருந்தது.
கொலையாளியும்
அதே பகுதியில் 2 ஆண்டுகளாக வசித்து வந்தவன் என்பது தெரியவந்தது.
கொலையாளியின் பெயர் பாபு. இவன் ஓட்டலில் பகுதி நேர வேலை பார்த்து வந்தான்.
பிரேமதாசாவின் வீட்டில் இருந்து சில நூறு மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு
வீட்டில் பாபு தங்கியிருந்தான். அந்த வீட்டின் சொந்தக்காரரான ஓட்டல் அதிபர்
ஒருவரும், பக்கத்து வீட்டுக்காரரும் பாபுவை அடையாளம் காட்டினார்கள்.
ஆனாலும்
கொலைக்கான காரணம் தெரியவராமல் மர்மமாகவே இருந்தது. கொலையாளி பாபுவின்
கழுத்தில் சயனைடு குப்பியுடன் கூடிய சங்கிலி இருந்தது. இதனால் அவன் விடு
தலைப்புலியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். ஆனால், பிரேமதாசா
கொலைக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விடுதலைப்புலிகள்
அறிவித்து விட்டனர். பிரேமதாசா 1924ம் ஆண்டு சலவைத் தொழிலாளி
குடும்பத்தில் பிறந்தவர்.
புத்த மதத்தின் மீது
தீவிர பற்று கொண்டவர். தனது 15வது வயதிலேயே அரசியலில் நுழைந்து மூத்த
தலைவர்களின் அன்பை பெற்றார். 1955ம் ஆண்டு கொழும்பு நகரசபையின் துணை மேயர்
ஆனார். 1965ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று இலங்கை பாராளுமன்ற
உறுப்பினர் ஆனார். அன்று முதல் கொழும்பு மத்திய பாராளுமன்ற தொகுதியில்
தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வாக்காளர்
மத்தியில் தனக்கென்று ஒரு தனி அடித்தளத்தை பிரேமதாசா அமைத்துக்கொண்டார்.
1968ம் ஆண்டு இலங்கை ஊராட்சி மன்றத்துக்கு மந்திரியாக நியமிக்கப்பட்டார்.
1970ம் ஆண்டு தேர்தலில் அவரது கட்சி தோற்றது. இதைத்தொடர்ந்து பாராளுமன்றத்
தில் அவர் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டார். இலங்கை ஜனாதிபதியாக இருந்த
ஜெயவர்த்தனாவின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தார். இதனால் பிரேமதாசா
பிரதமர் ஆனார்.
பிறகு 1988ம் ஆண்டு ஜனாதிபதி
தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானார். பிரேமதாசாவின் மனைவி பெயர் ஹேமா. இந்த
தம்பதிகளுக்கு ஒரு மகன்; ஒரு மகள். பிரேமதாசா 4 ஆண்டுகள் அதிபர் பதவியில்
நீடித்தார். தேர்தலை சந்திக்க 1 ஆண்டு இருந்த நிலையில், படுகொலை
செய்யப்பட்டார்.